ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தந்தை-மகன்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2026

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தந்தை-மகன்...

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் பூங்குன்றன் (வயது55). இவர் நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள ஒரு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய 42-வது வயதில் தகுதித்தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்று பணிக்கு சேர்ந்தார். இவருடைய மகன் ராகுல் (27) பி.இ.பி.எட். முடித்தவர்.

இவர்கள் இருவரும் சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-ஐ எழுதினர். இந்த நிலையில், நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தந்தை, மகன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தந்தை பூங்குன்றன் 85 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மகன் ராகுல் அவரை கூட கூடுதலாக ஒரு மதிப்பெண் அதாவது 86 மதிப்பெண்கள் பெற்று, தந்தையை மிஞ்சி விட்டார்.

பூங்குன்றன் தன்னுடைய 55-வது வயதிலும் மனம் தளராமல் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தந்தை, மகன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி