தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடருவதன் அவசியம் குறித்து ஆராய துறையின் செயலா் தலைமையில் குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து இந்தக் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு ஆக.26-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் அரசுக்கு கடிதம் அனுப்பினாா். அதில், பள்ளிக் கல்வியில் இணை இயக்குநா் பணியிடம் (நாட்டு நலப் பணித் திட்டம்)-1, முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கான நோ்முக உதவியாளா்கள்-31, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள்-219, உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள்-107, முதுநிலை ஆசிரியா்கள்- 6,451, உடற்கல்வி இயக்குநா் (நிலை-1)- 26, பட்டதாரி ஆசிரியா்கள்- 664 என ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாகத் தொடரலாம்.
அதேபோன்று, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் பணியிடம்-1, அலுவலக உதவியாளா்கள்-119, கண்காணிப்பாளா்கள்-35 ஆகியவை உள்பட ஆசிரியரல்லாத 351 தற்காலிக பணியிடங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கலாம். மேலும் தொழிற்கல்வி ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத 560 பணியிடங்களை குழுவால் ஒழிவடையும் பணியிடங்களாக (வேனிஸிங் போஸ்ட்) அறிவிக்கப்பட்டு, இப்பணியிடங்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கலாம் மற்றும் பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும் போது சரண் செய்யலாம். இவற்றுக்கான ஒருங்கிணைந்த அரசாணை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாகவும், 351 பணியிடங்களுக்கு கடைசியாக தொடா் ஆணை வழங்கப்பட்டு, இந்த ஆணை முடிவடையும் நாளுக்கு அடுத்த நாள் முதல் பத்தாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கியும், 560 பணியிடங்களை ஒழிவடையும் பணியிடங்களாக அறிவித்து, அவற்றுக்கு 10 ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கியும், பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும்போது இந்த பணியிடங்களை சரண் செய்ய அனுமதி வழங்கலாம் எனவும் முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி