பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: ஸ்கிரைப் நியமனத்தில் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2026

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: ஸ்கிரைப் நியமனத்தில் மாற்றம்

 

பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்வு எழுதும் மாணவர்​களுக்​கான ஸ்கிரைப் நியமன விதி​முறை​களில் தேர்​வுத் துறை சில திருத்​தங்​களை செய்​துள்​ளது. சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை இந்த பணிக்கு நியமிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தேர்​வுத் துறை இயக்​குநர் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: பத்​தாம் வகுப்பு பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இந்த வகுப்​புக்​கான கணிதம், அறி​வியல், சமூக அறி​வியல் ஆகிய பாடங்​களுக்கு தேர்​வர்​களின் முகப்​புத் தாள்​கள் முதன்மை விடைத்​தாள்​களு​டன் தைக்​கப்​பட்​டுள்​ளதை தேர்​வுக்கு முன்​னரே உறுதி செய்ய வேண்​டும்.

இதுத​விர, சொல்​வதை எழுதுபவர் (ஸ்​கிரைப்) நியமனங்​களில் தேர்வு நடை​பெறும் பாடத்தை பயிற்று​விக்​கும் ஆசிரியர்​களை நியமிக்​கக்​கூடாது. அதே​போல, பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வின் அறை கண்காணிப்பு பணியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிற்​று​விக்​கும் ஆசிரியர்​கள்​தான் நியமிக்​கப்பட வேண்​டும். தேர்​வர்​களுக்கு வழங்​கப்​படும் கோடிடப்​ப​டாத கூடு​தல் விடைத்​தாள்​களை போது​மான அளவு பெற்று வைத்​துக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்​வு​கள் ஏப்​ரல் 6-ம் தேதி​யுடன் நிறைவடைய​ உள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி