பாடப் புத்தகத்தில் சர்ச்சை கருத்து: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2026

பாடப் புத்தகத்தில் சர்ச்சை கருத்து: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி

 

பாடப் புத்தகத்தில் நீ​தித்​துறைபற்றி சர்ச்​சைக்​குரிய கருத்து இடம்​பெற்​றது தொடர்​பாக என்​சிஇஆர்டி நேற்று நிபந்தனையற்ற மன்​னிப்பு கோரியது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் (என்சிஇஆர்​டி) புதி​தாக அச்​சிடப்​பட்ட 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்​தகத்​தில் 'நமது சமூகத்​தில் நீதித்​துறை​யின் பங்​கு' என்ற தலைப்​பிலான பாடம் இடம்​பெற்​றிருந்​தது. அதில் நீதித்துறை​யில் ஊழல் நில​வுவ​தாக​வும் வழக்​கு​கள் தேங்கியிருப்பதாக​வும் கூறப்பட்டிருந்தது. இது நீதித் ​துறை மீது அவ நம்​பிக்​கையை ஏற்படுத்​தும் என கல்​வி​யாளர்​கள் மத்​தி​யில் எதிர்ப்பு கிளம்​பியது.

இது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​குப் பதிவு செய்​தது. தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு இந்த வழக்கை விசா​ரித்​த​போது என்​சிஇஆர்​டிக்கு கடும் கண்​டனம் தெரி​வித்​தது. இது திட்​ட​மிடப்​பட்ட சதி என்​றும் அதிருப்தி தெரி​வித்​தது.

சர்ச்​சைக்​குரிய கருத்​துகள் தொடர்​பாக உங்​களுக்கு எதி​ராக ஏன் நடவடிக்கை எடுக்​கக்​கூ​டாது என்​ப​தற்கு விளக்​கம் அளிக்​கு​மாறு என்​சிஇஆர்டி இயக்​குநர் மற்​றும் பள்​ளிக் கல்வி செய​லா​ள​ருக்கு உத்​தர​விட்​டது. அந்​தப் பாடம் இடம்​பெற்ற புத்​தகத்தை (டிஜிட்​டல் மற்​றும் அச்​சுப் பிர​தி​களை) முடக்​க​வும் உத்​தர​விட்​டது. புத்​தகம் சென்​றடைந்த ஒவ்​வொரு பள்​ளி​யிலும் அவற்றை பறி​முதல் செய்வது அந்​தந்​தப் பள்ளி முதல்​வர் மற்​றும் என்​சிஇஆர்டி இயக்குநரின் பொறுப்​பாகும் என்​றும் தெரி​வித்​தது.

திரும்பப் பெறப்பட்டது: இந்​நிலை​யில் என்​சிஇஆர்டி நேற்று வெளியிட்​டுள்ள அறிக்​கை​யில், “என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் புத்​தகத்​தின் 4-வது அத்​தி​யா​யத்​தில் 'நமது சமூகத்​தில் நீதித் ​துறை​யின் பங்​கு' என்ற பாடம் உள்​ளது. இதில் இடம்​பெற்றுள்ள கருத்​துகளுக்​காக என்​சிஇஆர்​டி-​யின் இயக்​குநர் மற்றும் உறுப்​பினர்​கள் நிபந்​தனையற்ற மன்​னிப்பு கோருகின்றனர். அந்த முழு புத்​தக​மும் திரும்​பப் பெறப்பட்டுள்ளது. மேலும் அந்​தப் புத்​தகம் தற்​போது புழக்​கத்​தில் இல்​லை" என்​று கூறி​யுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி