பாடப் புத்தகத்தில் நீதித்துறைபற்றி சர்ச்சைக்குரிய கருத்து இடம்பெற்றது தொடர்பாக என்சிஇஆர்டி நேற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) புதிதாக அச்சிடப்பட்ட 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு' என்ற தலைப்பிலான பாடம் இடம்பெற்றிருந்தது. அதில் நீதித்துறையில் ஊழல் நிலவுவதாகவும் வழக்குகள் தேங்கியிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இது நீதித் துறை மீது அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தபோது என்சிஇஆர்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இது திட்டமிடப்பட்ட சதி என்றும் அதிருப்தி தெரிவித்தது.
சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக உங்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு என்சிஇஆர்டி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி செயலாளருக்கு உத்தரவிட்டது. அந்தப் பாடம் இடம்பெற்ற புத்தகத்தை (டிஜிட்டல் மற்றும் அச்சுப் பிரதிகளை) முடக்கவும் உத்தரவிட்டது. புத்தகம் சென்றடைந்த ஒவ்வொரு பள்ளியிலும் அவற்றை பறிமுதல் செய்வது அந்தந்தப் பள்ளி முதல்வர் மற்றும் என்சிஇஆர்டி இயக்குநரின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தது.
திரும்பப் பெறப்பட்டது: இந்நிலையில் என்சிஇஆர்டி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தின் 4-வது அத்தியாயத்தில் 'நமது சமூகத்தில் நீதித் துறையின் பங்கு' என்ற பாடம் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்காக என்சிஇஆர்டி-யின் இயக்குநர் மற்றும் உறுப்பினர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகின்றனர். அந்த முழு புத்தகமும் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் அந்தப் புத்தகம் தற்போது புழக்கத்தில் இல்லை" என்று கூறியுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி