தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது: சென்னை ஐஐடி சார்பில் வழங்கப்பட்டது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2026

தேசிய அளவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது: சென்னை ஐஐடி சார்பில் வழங்கப்பட்டது

தேசிய அளவில் சிறந்த பள்ளி ஆசிரியர்​கள் 6 பேருக்கு சென்னை ஐஐடி விருதுகள் வழங்​கப்​பட்​டன. பள்ளி மாணவர்​களுக்கு கணிதம், இயற்​பியல், வேதி​யியல் ஆகிய பாடங்​களை நல்ல முறை​யில் பயிற்​று​வித்​து, அறி​வியல் ஆர்​வத்தை ஏற்​படுத்​தி, அவர்​கள் அறி​வியல் மற்​றும் பொறி​யியல் படிப்​பு​களில் சேர சிறப்​பாகப் பணி​யாற்​றும் பள்ளி ஆசிரியர்​களுக்கு சென்னை ஐஐடி தேசிய அளவில் விருது வழங்கி கவுர​வித்து வரு​கிறது.

கடந்த ஆண்​டிலிருந்து வழங்​கப்​படும் இந்த விருது, ‘முதல் கொள்​கைகள் ஆசிரியர் விருது’ என அழைக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் 2026-ம் ஆண்​டுக்​கான ஐஐடி விருதுக்கு தேர்​வு செய்​யப்​பட்ட 6 ஆசிரியர்​களுக்கு ஐஐடி இயக்​குநர் காமகோடி நேற்று விருது வழங்​கி​னார்.

அவர் வாழ்த்​திப் பேசும்​போது, “ஒரு மாணவரின் எதிர்​காலத்தை வடிவ​மைப்​ப​தில் பள்ளி ஆசிரியர்​கள் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றனர். ஆசிரியர்​களால்​தான் மாணவர்​களின் சிந்​தனையை​யும் கற்​றலை​யும் மேம்​படுத்த முடி​யும்.

இத்​தகைய உயர் பணியை செய்​யும் ஆசிரியர்​களுக்கு உரிய அங்​கீ​காரம் கிடைப்​ப​தில்​லை. அந்த வகை​யில் மாணவர்​களுக்கு சிறந்த எதிர்​காலத்தை உரு​வாக்​கும் ஆசிரியர்​களுக்கு விருது வழங்கி ஐஐடி கவுரவிக்​கிறது.

இந்த விருது மற்ற ஆசிரியர்​களுக்​கும் உத்​வேகத்​தை​யும் ஊக்​கத்​தை​யும் அளிக்​கும் என்று நம்​பு​கிறோம். இதன்​மூலம் அனைத்து மாணவர்​களுக்​கும் தரமான கல்வி கிடைக்​கும். தேசிய கல்விக் கொள்கை 2020-ல் வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளபடி நம் நாட்​டில் உயர் கல்விக்கு செல்​லும் மாணவர்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்பட வேண்​டும்” என்​றார்.

தொடர்ந்​து, டீன் (கல்​வி) பேராசிரியர் பிர​தாப் ஹரி​தாஸ் பேசும்​போது, “அடிப்​படை அறி​வியல் புரிதலுடன் ஐஐடி​யில் சேரும் மாணவர்​கள் உயர் கல்​வி​யிலும் வேலை​யிலும் சிறந்து விளங்​கு​கிறார்​கள். மாணவர்​கள் சரி​யான வழி​யில் படித்​தால் அறி​வியல், பொறி​யியல் படிப்புகள் மிகவும் உற்சாகம் அளிக்கும்'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி