கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில், எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி என்ற புதிய படிப்பை வரும் கல்வி ஆண்டில் தொடங்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை செயலர் பி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் எம்.ஃபில். கிளினிக்கல் சைக்காலஜி என்ற படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த படிப்புக்கு பதிலாக எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி என்ற பெயரில் புதிய படிப்பை வழங்குமாறு இந்திய மறுவாழ்வுக் கவுன்சில், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை அறிவுறுத்தியது.
ஆண்டுக்கு 18 மாணவர்கள்
அதன் பேரில், வரும் கல்வி ஆண்டு (2026-2027) எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பை தொடங்கும் வகையில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மூலமாக, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை இயக்குநரின் கருத்துரு அரசுக்கு வரப்பெற்றது.
அக்கருத்துருவை ஏற்று கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் 2026-27-ம் கல்வி ஆண்டில் எம்.ஏ. கினிக்கல் சைக்காலஜி படிப்பை தொடங்கவும், ஆண்டுதோறும் 18 மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.
இப்புதிய படிப்புக்கு இந்திய மறுவாழ்வுக் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்திடம் உரிய அனுமதி பெறப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி