தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அறிவியல் பாடத் தேர்வு நேற்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 4,219 மையங்களில் சுமார் 8.80 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அறிவியல் பாட ஆசிரியர்கள் கூறும்போது, “அறிவியல் தேர்வில் அனைத்துப் பிரிவு வினாக்களும் மிக எளிதாக இருந்தன. சராசரியாக படிக்கும் மாணவர்கள்கூட 70 சதவீத மதிப்பெண்களைப் பெறமுடியும். இந்த ஆண்டு அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்” என்றனர்.
சமூக அறிவியல் பாடத் தேர்வு ஏப்.2-ம் தேதி நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்.6-ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி