JEE 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர் தமினா கிரிஷ் உட்பட 14 பேர் முழு மதிப்பெண் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2026

JEE 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர் தமினா கிரிஷ் உட்பட 14 பேர் முழு மதிப்பெண்

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்​மைத் தேர்​வில் தமிழகத்​தைச் சேர்ந்த மாணவர் தமினா கிரிஷ் உட்பட 14 பேர் முழு மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளார்.

நம்​நாட்​டில் ஐஐடி, என்​ஐடி போன்ற மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலை படிப்​பு​களில் சேர ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்​டும். இவை ஜேஇஇ முதன்​மைத் தேர்​வு, பிர​தானத் தேர்வு என இரு பிரி​வாக நடை​பெறும்.

இதில் முதன்​மைத் தேர்​வானது தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) சார்​பில் ஆண்​டு​தோறும் 2 கட்​டங்​களாக நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி 2026-27-ம் கல்​வி​யாண்​டுக்​கான ஜேஇஇ முதல்​கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 21 முதல் 28-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது.

இந்த தேர்வை சுமார் 13 லட்​சம் பேர் எழு​தினர். இதன் முடிவு​கள் பிப்​ர​வரி 16-ம் தேதி வெளி​யிடப்​பட்​டன. இதைத் தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்​டத் தேர்வு ஏப்​ரல் 2 முதல் 8-ம் தேதி வரை நடை​பெற்​றது. இந்த தேர்வை நாடு முழு​வதும் 584 மையங்​களில் 10 லட்​சத்து 34,330 மாணவர்​கள் எழு​தினர்.

அதற்​கான தேர்வு முடிவு​கள் நேற்று முன்​தினம் இரவு வெளி​யானது. மாணவர்​கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணை​யதளத்​தில் சென்று தங்​கள் தேர்வு முடிவு​களை அறிய​லாம். இந்த தேர்​வில் மொத்​தம் 14 பேர் முழு மதிப்​பெண் பெற்று சாதனை படைத்​துள்​ளனர்.

தமிழகத்​தில் மாணவர் தமினா கிரிஷ் முழு மதிப்​பெண் பெற்​றுள்​ளார். இதுகுறித்த கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in என்ற இணை​யதளத்​தில் அறிய​லாம்.

ஏதேனும் சந்​தேகம் இருப்​பின் மாணவர்​கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்​லது jeemain@nta.ac.in எனும் மின்​னஞ்​சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

இவ்​விரு தேர்​வு​களில் மாணவர்​கள் பெற்ற அதிக மதிப்​பெண் அடுத்​தகட்ட ஜேஇஇ பிர​தானத் தேர்​வுக்கு கணக்​கில் கொள்​ளப்​படும். பிர​தானத் தேர்வு மே 17-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்கு தகு​தி​யான நபர்​கள் ஏப்​ரல் 23 முதல் மே 2-ம் தேதி முதல் விண்​ணப்​பிக்​கலாம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி