தமிழகத்தில் நீட் தேர்வுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து மறு தேர்வுக்கான குறுகிய கால பயிற்சியை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நீட் தேர்வில் பங்கேற்கவுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் ஜூன் 20-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த முகாமில் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராகும் வகையில் பாடவாரியாகப் பயிற்சிகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் கல்வியியல் நிபுணர்களின் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.
இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்பதை தலைமை ஆசிரியர்கள் வாயிலாக உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி