கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணிவரன்முறை செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2026

கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணிவரன்முறை செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

 

அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் பணி​யாற்​றும் கவுரவ விரிவுரை​யாளர்​களை உதவி பேராசிரியர்​களாக பணி வரன்​முறை செய்ய முடி​யாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரி​வித்​துள்ளது.

தமிழகத்​தில் அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் கவுரவ விரிவுரை​யாளர்​களாக பணி​யாற்றி வந்​தவர்​கள், தங்​களை பணி வரன்​முறை செய்​து, உதவிப் பேராசிரியர்​களாக நியமிக்க வேண்​டும் என கோரிக்கை விடுத்து வந்​தனர்.

அதையடுத்து ஆயிரத்து 146 கவுரவ விரிவுரை​யாளர்​களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூல​மாக சிறப்​புத் தேர்வு நடத்​தி, உதவி பேராசிரியர்​களாக நியமிப்​பது தொடர்​பாக கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் கடந்த 2022-ம் ஆண்​டு, ஏற்​கெனவே பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு முன்​பாக 3 ஆண்​டு​களாக காலி​யாக இருந்த 4000 உதவி பேராசிரியர் பணி​யிடங்​களுக்​கும் சேர்த்து தேர்வு நடத்த புதி​தாக அரசாணை வெளி​யிட்​டது.

இந்த அறி​விப்பை ரத்து செய்​யக் கோரி​யும், 2020-ம் ஆண்டு பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணைப்​படி தங்​களை பணிவரன்​முறை செய்​யக்​கோரியும் கவுரவ விரிவுரை​யாளர்​கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த தனிநீதிப​தி, கடந்த 2022-ம் ஆண்டு பிறப்​பித்த அரசாணையை ரத்து செய்​து, கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி வரன்​முறை செய்​வது தொடர்​பான 2020 அரசாணைப்​படி தேர்வு நடை​முறை​களை முடிக்க வேண்​டும் என கடந்த 2024 ஏப்​ரலில் உத்​தர​விட்​டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக உயர் கல்​வித் துறை, கல்​லூரி கல்வி இயக்​குநரகம், ஆசிரியர் தேர்வு வாரி​யம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இந்த மேல்​முறை​யீட்டை விசா​ரித்த நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, கவுரவ விரிவுரை​யாளர்​கள் சம்​பந்​தப்​பட்ட கல்​லூரி​கள் அளவி​லான குழுக்​கள் மூல​மாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ள​தால், அவர்​களின் கோரிக்​கையை ஏற்​பது என்​பது உச்ச நீதி​மன்​றம் வகுத்​தளித்த போட்​டித் தேர்வு நடை​முறை கொள்​கையை நீரத்​துப்​போகச் செய்​து​விடும் எனக்​கூறி தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்​தனர்.

மேலும், பணி வரன்​முறை என்​பதும், தேர்வு நடை​முறை என்​பதும் வெவ்​வேறானவை என்​ப​தால் பணி வரன்​முறையை உரிமை​யாக கோர முடி​யாது. எனவே அரசு கல்​லூரி​களில் காலி​யாக உள்ள ஆயிரத்து 292 உதவி பேராசிரியர் பணி​யிடங்​களுக்​கான தேர்வு குறித்த அறி​விப்பை விரை​வில் வெளி​யிட வேண்​டும் என ஆசிரியர் தேர்வு வாரி​யத்​துக்கு தமிழக அரசு உத்​தர​விட வேண்​டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி