SSLC பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2026

SSLC பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

SSLC பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்:

மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 22.05.2026 அன்று பிற்பகல் முதல் பெற்றுக் கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் சென்று SSLC Provisional Mark Certificate என்பதை Click செய்து தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

II. விடைத்தாள் ஒளிநகலுக்கு விண்ணப்பம் செய்தல்:

விடைத்தாள் ஒளிநகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 22.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி முதல் 27.05.2026 மாலை 5.00 மணி (புதன்கிழமை) (24.05.2026 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) வரை விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் ஒளிநகல் (Scan Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம் ரூ.275/- தேர்வர்கள் விடைத்தாட்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.

விடைத்தாள் ஒளிநகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

விடைத்தாளின் ஒளிநகலினை (Scan Copy) இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும் மற்றும் www.dge.tn.gov.in இணையதளத்திலும் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி