பிறப்புச் சான்றில் குழந்தையின் பெயரினை மாற்ற ஒரு வாய்ப்பு ( கடைசி தேதி - 26.09.2026 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 12, 2026

பிறப்புச் சான்றில் குழந்தையின் பெயரினை மாற்ற ஒரு வாய்ப்பு ( கடைசி தேதி - 26.09.2026 )

பிறப்புச் சான்றிதழ் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரின் பத்திரிகைச் செய்தி!

குறிப்பு: அனைத்து மாவட்டத்திற்கும் பொருந்தும்....

பிறப்புப் பதிவு - குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ வயது குறித்த ஆதாரம், குடியுரிமைக்கான ஆதாரம் ஆகும். குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றுதான் முழுமை பெற்ற சான்றிதழ் ஆகும்.

குழந்தையை பள்ளியில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டை பெற. ஓட்டுநர் உரிமம்பெற, அரசுப் பணிகளில் சேர. கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச்சான்று இன்றியமையாத ஆவணமாகும்.

ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அப்பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாத காலத்திற்குள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளரிடம் சமர்ப்பித்து குழந்தையின் பெயரினை தாமத கட்டணமின்றி பதிவுசெய்து கொள்ளலாம்.

12 மாதங்களுக்கு பின் குழந்தையின் பெயரினை 15 வருடத்திற்குள் காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி, உரிய அலுவலரின் அனுமதி பெற்று பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு 15 வருடத்திற்கு மேற்பட்ட மற்றும் 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போது பிறந்திருந்தாலும் குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படாத பிறப்புகளுக்கு வரும் 26.09.2026 வரை பெயர் பதிவு செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தையின் பெயரினை இதுவரை பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யாதோர் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து குழந்தையின் பெயரினை பதிவுசெய்து கொள்ளலாம்.

பிறப்புச் சான்றில் குழந்தையின் பெயரினை ஒருமுறை பதிவு செய்த பின்னர் எக்காரணம் கொண்டும் பெயரினை மாற்றம் செய்ய இயலாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி 26.09.2026-க்குள் குழந்தையின் பெயரினை பிறப்புச் சான்றில் பதிவுசெய்து பயன்பெறுமாறு மாவட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பராஜகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி