இந்தியாவிலேயே முதன்முறையாக ‘பொறியியல் உயிரியல்’ பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று தெரிவித்தார்.
நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: ”இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், முதன்முறையாக பொறியியல் உயிரியல் படிப்பை அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பை நான் இங்கு வெளியிடுகிறேன். மேலும், மருத்துவப் பள்ளிகளைத் தொடங்குவதற்காக ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் கூட எங்கள் அமைச்சகத்திடம் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளன.
ஒரு அல்ட்ரா சவுண்ட் அல்லது அதி நவீன எம்ஆர்ஐ பரிசோதனை செய்வது என்பது இனி ரேடியாலஜிஸ்டுகளுடன் மட்டுமே நின்றுவிடுவதில்லை. வருங்காலத்தில் இத்தகைய பரிசோதனைகளின் போது ஒரு ரேடியாலஜிஸ்டுடன் இணைந்து ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொறியாளரும் பணியாற்ற வேண்டியிருக்கும். எனவே, நமக்கான ஒரு வலுவான, சுதந்திரமான திறமை வாய்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, உயிரிப் பொருளாதாரத்தில் இந்தியாவை உலகளாவிய முன்னிலையில் நிலைநிறுத்துவதற்கும், வரும் 2047ம் ஆண்டிற்குள் 2.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உயிரிப் பொருளாதாரத்தை எட்டுவதற்குமான உத்திகள் குறித்தும் அமைச்சர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி