1 முதல் 3 ஆம் வகுப்புகள் புதிய பாடத்திட்டம் - வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி - இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள்
1-3rd Std. New Text Book - Online Training for BEEOs, BRTEs, DEEOs - Reg..pdf
👇👇👇
New Curriculum for Classes 1 to 3 | Training for Block Educational Officers and Block Resource Centre Teacher Educators | Joint Proceedings of the Directors
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்கக இயக்குநர்களின் இணை செயல்முறைகள், சென்னை -06.
ந.க.எண்.29299/எஃப்4/2023 நாள். 16.07.2026.
பொருள்:
பயிற்சி - 1 முதல் 3 ஆம் வகுப்புகள் வரை புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கியமை பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் அளித்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக.
பார்வை:
1. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் கடிதம் எண்.RC.No.2531/A11/FLN-PMU/SS/22 Date 30.03.2023.
2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.50656/அ1/இ4/2023, நாள் 31.08.2023.
3. இந்நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.2640773/ஊ1/2026, நாள்.11.06.2026.
பார்வையில் கண்டுள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் பள்ளிக்கல்வித் துறை செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மாற்றியமைத்து, மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 1 முதல் 3 முடிய உள்ள வகுப்புகளை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கு, முதல் பருவத்திற்கான பயிற்சியானது மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது வட்டார அளவில் உள்ள பள்ளிகளின் வகுப்பறையினை உற்றுநோக்கல், பள்ளிப்பார்வை மற்றும் கண்காணிப்பு அலுவலராக உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு புதிய பாடத்திட்டம் சார்ந்த (1 முதல் 3 ஆம் வகுப்பு வரை) முதல் பருவத்திற்கான ஒரு நாள் பயிற்சியினை இணையவழியில் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பங்கேற்க அறிவுறுத்தப்படுகிறது.
இந்த இணையவழி பயிற்சியில் தங்களது மாவட்டத்திலேயே உரிய அலுவலர்கள் பங்கேற்கும் வகையில், எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுடன் இணைந்து பயிற்சி மையத்தினை தெரிவு செய்து, 23.07.2026 அன்று ஒரு நாள் பயிற்சி நடைபெறும் வகையில் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியின் மைய எண்ணிக்கைக்கேற்ப அந்தந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள். முதுநிலை விரிவுரையாளர்கள் பொறுப்பேற்று நடத்திடுமாறும், பயிற்சி முடிவுற்ற பின்னர் அறிக்கை விவரத்தினை பின்னர் இந்நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மேற்படி பயிற்சி சார்ந்து உத்தேச செலவினத் தொகை தங்களது நிறுவன வங்கிக் கணக்கிற்கு பின்னர் விடுவிக்கப்படும்.
இணைப்பு: மைய எண்ணிக்கை விவரப் படிவம்
இயக்குநர்
தொடக்கக்கல்வி இயக்ககம்
இயக்குநர்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
இயக்குநர்,
பள்ளிக்கல்வி இயக்ககம்
பெறுநர்
1. முதல்வர்கள், அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்.
2. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.
3. மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி