திருக்குறள்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:449
குறள்:
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
பொருள்:
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.
East or west, home is best.
எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.
2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.
பொன்மொழி :
நல்ல எண்ணங்களே நல்ல வாழ்க்கையின் அடித்தளம்.
Thought for the Day :
Time is precious. Use it wisely.
பொது அறிவு :
1. மனித உடலின் மிக நீளமான எலும்பு எது?
தொடை எலும்பு (பீமர் எலும்பு)
2. மனித உடலின் மிக சிறிய எலும்பு எது?
உட்செவி எலும்பு (அங்கவடி எலும்பு).
English words :
Determine - Firmly decide or find out, தீர்மானி.
Magnificent - Extremely beautiful or impressive, பிரமாதமான.
புவியியலும் சுற்றுசூழலும் :
மலைகள் (Mountains) – உயரமான நிலப்பகுதிகள்.
மலைத் தொடர்கள் (Mountain Ranges) – ஒன்றோடொன்று இணைந்த மலைகளின் வரிசை.
பீடபூமிகள் (Plateaus) – உயரமாகவும் சமமாகவும் காணப்படும் நிலப்பகுதிகள்.
சமவெளிகள் (Plains) – தட்டையான, பரந்த நிலப்பகுதிகள்.
NMMS :
MAT
P என்பவர் Q விற்கு சகோதரர். R என்பவர் S ற்கு சகோதரி.Q என்பவர் R ற்கு மகன் எனில், R என்பவர் Pக்கு என்ன உறவு?
(1)தந்தை
(2)தாய்
(3)மருமகன்
(4) மருமகள்
விடை: (2) தாய்
ஜூலை 14
நீதிக்கதை
"கடன் அன்பை முறிக்கும்"
ஒரு சிறிய கிராமத்தில் அருள் மற்றும் யாசின் என்ற இரு நண்பர்கள் வாழ்ந்தனர். அவர்கள் சிறு வயதிலிருந்தே உயிர் நண்பர்கள். எந்த வேலையையும் சேர்ந்து செய்வார்கள்.
ஒருநாள் யாசின், "என் தங்கையின் படிப்புச் செலவுக்காக ₹20,000 வேண்டும். ஒரு மாதத்தில் திருப்பித் தருகிறேன்," என்று அருளிடம் கேட்டான்.
நண்பன் என்பதால் அருளும் யோசிக்காமல் பணத்தைக் கொடுத்தான்.
ஒரு மாதம் முடிந்தது. இரண்டு மாதங்களும் கடந்தன. ஆனால் யாசின் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. அருள் கேட்டபோதெல்லாம், "இன்னும் கொஞ்ச நாள் பொறு," என்று கூறிக்கொண்டே இருந்தான்.
சில நாட்களுக்குப் பிறகு, கிராமத் திருவிழாவில் இருவரும் சந்தித்தனர். அருள் மீண்டும் பணத்தைப் பற்றி கேட்டான். அதற்கு யாசின் கோபமாக, "பணம் கொடுத்ததாலே என்னை அவமானப்படுத்துகிறாயா?" என்று அனைவரின் முன்னிலும் பேசிவிட்டான்.
அதைப் பார்த்த அருளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பணத்தை விட, பல ஆண்டுகள் இருந்த நட்பு உடைந்ததே அவனுக்கு பெரிய வேதனையாக இருந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு, யாசின் தனது தவறை உணர்ந்து பணத்தையும் திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்டான். ஆனால் உடைந்த நம்பிக்கையை மீண்டும் பழையபடி உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது.
நீதி:
"கடன் வாங்குவது எளிது; அதைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தாதபோது, பணத்தை விட அன்பும் நம்பிக்கையும் முதலில் முறியும்.”
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி