திருக்குறள்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:444
குறள்:
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை
பொருள்:
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.
Appearance is deceitful.
உருவத்தை கண்டு ஏமாறாதே.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால், எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.
2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.
பொன்மொழி :
நம்பிக்கையுடன் தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றியை நோக்கிச் செல்லும்.
Thought for the Day :
Discipline is the bridge between goals and achievement.
பொது அறிவு :
1. தமிழ்நாடு மாநிலம் உருவாகும் போது எத்தனை மாவட்டங்கள் இருந்தன?
13 மாவட்டங்கள்
2. மூளையை தூண்டி நினைவுத்தின் அதிகரிக்க வைக்கும் உணவு எது?
வால்நட்.
English words :
Require – Need, தேவைப்படு.
Conclude – Finish, முடி
புவியியலும் சுற்றுசூழலும் :
உலகின் மிகப் பெரிய கண்டமாக – ஆசியா திகழ்கிறது.
உலகின் சிறிய கண்டம் மற்றும் நாடாக விளங்குவது – ஆஸ்திரேலியா ஆகும்
NMMS :
MAT
பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி
(1) PLAY.
(2) WRITE.
(3) THINK.
(4) WALK.
விடை: (3) THINK
ஜூலை 07
நீதிக்கதை
நீதிக்கதை:
"ஆரோக்கியமே உண்மையான செல்வம்"
ஒரு ஊரில் கார்த்திக், பிரியா மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் சஞ்ஜய், வந்தனா ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
சஞ்ஜய்க்கு தினமும் பள்ளி முடிந்து வரும்போது பர்கர், சிப்ஸ், குளிர்பானம் போன்ற ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கம் இருந்தது. அம்மா வீட்டில் சத்தான உணவு செய்து வைத்தாலும், "எனக்கு இதுதான் பிடிக்கும்!" என்று கூறி ஜங்க் ஃபுட்டையே விரும்பி சாப்பிடுவான்.
சில நாட்களில் சஞ்ஜய்க்கு அடிக்கடி வயிற்றுவலி, சோர்வு, பல் வலி ஆகியவை ஏற்பட ஆரம்பித்தன. விளையாடவும் முடியவில்லை. மருத்துவரிடம் சென்றபோது, "அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கவில்லை. இனிமேல் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும்," என்று அறிவுரை கூறினார்.
அந்த நாளிலிருந்து சஞ்ஜயும் குடும்பத்தினரும் சேர்ந்து தினமும் சத்தான உணவுகளை சாப்பிடத் தொடங்கினர். பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் சேர்த்தனர்.
சில வாரங்களிலேயே சஞ்ஜயின் உடல்நலம் நன்றாகி, மீண்டும் உற்சாகமாக பள்ளிக்கும் விளையாட்டிற்கும் செல்ல ஆரம்பித்தான்.
அப்போது சஞ்ஜய் தனது தங்கையிடம், "சுவைக்காக மட்டும் ஜங்க் ஃபுட் சாப்பிடக் கூடாது. ஆரோக்கியமான உணவுதான் நம்மை வலிமையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்," என்று கூறினான்.
நீதி: ஜங்க் ஃபுட்டை அதிகமாகச் சாப்பிடாமல், சத்தான உணவை உண்பதே நல்ல ஆரோக்கியத்திற்கான வழி.
இன்றைய செய்திகள்
🗒️கோடைக்கால வெப்ப அலை மற்றும் காலநிலை மாற்றத்தின் எதிரொலியாக, தெற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயினால் 30 ஆயிரம் ஏக்கர் மரங்கள் கருகின.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி