திருக்குறள்
இயல் : அரசியல்
அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:450
குறள்:
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
பொருள்:
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
Every ass loves his bray
காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன்.
2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.
பொன்மொழி :
வெற்றி என்பது இறுதி அல்ல; தோல்வி என்பது முடிவும் அல்ல; தொடர்ந்து முன்னேறும் துணிவே முக்கியம்.
Thought for the Day :
"Every day is a new chance to learn and grow."
பொது அறிவு :
1 . எந்த உயிரியின் உடல் பாகங்களிலிருந்து 40 வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன?
ஆமை.
2. உலகின் விலையுயர்ந்த மரம் எது?
ஆப்பிரிக்கா கருப்பு மரம்..
English words :
Obvious - Clear and easy to see, தெளிவான.
Pardon - Forgive a mistake or offense, மன்னிப்பு வழங்கு.
புவியியலும் சுற்றுசூழலும் :
"பள்ளத்தாக்குகள் (Valleys) – மலைகளுக்கு இடையில் உள்ள தாழ்வான பகுதிகள்.
ஆறுகள் (Rivers) – உயரமான இடங்களில் தோன்றி கடல் அல்லது ஏரியில் கலக்கும் நீரோடைகள்.
ஏரிகள் (Lakes) – நிலப்பரப்பால் சூழப்பட்ட நீர்நிலைகள்.
நீர்வீழ்ச்சிகள் (Waterfalls) – உயரமான இடத்திலிருந்து கீழே விழும் ஆறுகளின் பகுதிகள்."
NMMS :
MAT
கீழ்க்கண்ட சொற்களை ஆங்கில அகராதி முறையில் வரிசைப்படுத்தும்போது கடைசியிலிருந்து இரண்டாவதாக வரும் வார்த்தை என்ன?
Scramble, script, science, school.
(1)scramble.
(2) script.
(3) science.
(4) school.
விடை : (1) Scramble
ஜூலை 15
நீதிக்கதை
"துரோகத்தின் விலை "
ஒரு ஊரில் சங்கர் மற்றும் மூர்த்தி என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.
இருவரும் சேர்ந்து சிறிய மளிகைக் கடை நடத்தினர். வியாபாரம் நன்றாக
நடந்ததால், ஊரில் அனைவரும் அவர்களைப் பாராட்டினர்.
ஒருநாள், ஒரு பெரிய வியாபாரி மூர்த்தியிடம், "நீ தனியாக வந்தால் அதிக லாபம் தருகிறேன். ஆனால் சங்கரிடம் இதைப் பற்றி சொல்லக்கூடாது," என்றார்.
அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில், மூர்த்தி நண்பனுக்குத் தெரியாமல்
கடையின் பணத்தையும் சில வாடிக்கையாளர்களையும் தனக்காக மாற்றிக்கொண்டான்.
சில நாட்களில் சங்கர் உண்மையை அறிந்தான். அவன் கோபப்படாமல்
அமைதியாக, "நண்பனை நம்பி சேர்ந்து உழைத்தேன். ஆனால் நீ பணத்திற்காக
நட்பையே விற்றுவிட்டாய்," என்று கூறி அந்தக் கூட்டுத் தொழிலிலிருந்து விலகிவிட்டான்.
மூர்த்தி தனியாக வியாபாரம் செய்தான். ஆனால் அவனை யாரும் நம்பவில்லை .
அவன் துரோகம் செய்ததை அறிந்த வாடிக்கை யாளர்களும் மெதுவாக விலகினர்.
இறுதியில் அவனுடைய வியாபாரம் நஷ்டமடைந்தது.
அப்போது தான் மூர்த்தி உணர்ந்தான்: பணத்தை மீண்டும் சம்பாதிக்கலாம்;
ஆனால் ஒருமுறை இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவது மிகவும் கடினம்.
நீதி:
"யாருக்கும் துரோகம் செய்யாதே ; துரோகம் தற்காலிக லாபத்தைத் தரலாம், ஆனால் நிரந்தரமாக நம்பிக்கையையும் மரியாதையையும் இழக்கச் செய்யும்.”
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி