School Morning Prayer Activities - 15.07.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2026

School Morning Prayer Activities - 15.07.2026

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.07.2026

திருக்குறள்

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:45 பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:450

குறள்:

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

பொருள்:

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

பழமொழி :

Every ass loves his bray

காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன். 

2. தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன்.

பொன்மொழி : 

வெற்றி என்பது இறுதி அல்ல; தோல்வி என்பது முடிவும் அல்ல; தொடர்ந்து முன்னேறும் துணிவே முக்கியம்.

Thought for the Day :

"Every day is a new chance to learn and grow."

பொது அறிவு : 

1 . எந்த உயிரியின் உடல் பாகங்களிலிருந்து 40 வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன? 

ஆமை

2. உலகின் விலையுயர்ந்த மரம் எது? 

ஆப்பிரிக்கா கருப்பு மரம்..

English words :

Obvious - Clear and easy to see, தெளிவான.     

Pardon - Forgive a mistake or offense, மன்னிப்பு வழங்கு.       

புவியியலும் சுற்றுசூழலும் :

"பள்ளத்தாக்குகள் (Valleys) – மலைகளுக்கு இடையில் உள்ள தாழ்வான பகுதிகள்.

ஆறுகள் (Rivers) – உயரமான இடங்களில் தோன்றி கடல் அல்லது ஏரியில் கலக்கும் நீரோடைகள்.

ஏரிகள் (Lakes) – நிலப்பரப்பால் சூழப்பட்ட நீர்நிலைகள்.

நீர்வீழ்ச்சிகள் (Waterfalls) – உயரமான இடத்திலிருந்து கீழே விழும் ஆறுகளின் பகுதிகள்."

NMMS :

MAT 

கீழ்க்கண்ட சொற்களை ஆங்கில அகராதி முறையில் வரிசைப்படுத்தும்போது கடைசியிலிருந்து இரண்டாவதாக வரும் வார்த்தை என்ன? 

 Scramble,  script,  science,  school.                                   

 (1)scramble.                  

 (2) script.                          

 (3) science.                 

 (4) school.                         

 விடை : (1) Scramble              

ஜூலை 15

காமராசர்  அவர்களின் பிறந்த நாள்


காமராசர் (காமராஜர்) (K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நீதிக்கதை

 "துரோகத்தின் விலை "

ஒரு ஊரில் சங்கர் மற்றும் மூர்த்தி என்ற இரு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.

இருவரும் சேர்ந்து சிறிய மளிகைக் கடை நடத்தினர். வியாபாரம் நன்றாக

நடந்ததால், ஊரில் அனைவரும் அவர்களைப் பாராட்டினர்.

ஒருநாள், ஒரு பெரிய வியாபாரி மூர்த்தியிடம், "நீ தனியாக வந்தால் அதிக லாபம் தருகிறேன். ஆனால் சங்கரிடம் இதைப் பற்றி சொல்லக்கூடாது," என்றார்.

அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில், மூர்த்தி நண்பனுக்குத் தெரியாமல்

கடையின் பணத்தையும் சில வாடிக்கையாளர்களையும் தனக்காக மாற்றிக்கொண்டான்.

சில நாட்களில் சங்கர் உண்மையை அறிந்தான். அவன் கோபப்படாமல்

அமைதியாக, "நண்பனை நம்பி சேர்ந்து உழைத்தேன். ஆனால் நீ பணத்திற்காக

நட்பையே விற்றுவிட்டாய்," என்று கூறி அந்தக் கூட்டுத் தொழிலிலிருந்து விலகிவிட்டான்.

மூர்த்தி தனியாக வியாபாரம் செய்தான். ஆனால் அவனை யாரும் நம்பவில்லை .

அவன் துரோகம் செய்ததை அறிந்த வாடிக்கை யாளர்களும் மெதுவாக விலகினர்.

இறுதியில் அவனுடைய வியாபாரம் நஷ்டமடைந்தது.

அப்போது தான் மூர்த்தி உணர்ந்தான்: பணத்தை மீண்டும் சம்பாதிக்கலாம்;

ஆனால் ஒருமுறை இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவது மிகவும் கடினம்.

நீதி:

"யாருக்கும் துரோகம் செய்யாதே ; துரோகம் தற்காலிக லாபத்தைத் தரலாம், ஆனால் நிரந்தரமாக நம்பிக்கையையும் மரியாதையையும் இழக்கச் செய்யும்.”

இன்றைய செய்திகள்

15.07.2026

🗒️ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதல் நிலையைத்  துரிதமாக அதிகரிக்க வேண்டும் .முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தல். 

🗒 அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் ஏழைகளுக்கு வழக்கறிஞர்கள் இலவச சட்ட உதவி வழங்க வேண்டும் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

🗒️புதிய அப்டேட்டை வெளியிட்ட சி.பி.எஸ்.இ: 9,10வகுப்புகளில் 
மூன்றாம் மொழியின் உள் மதிப்பீட்டு தேர்வில், தேர்ச்சி கட்டாயம் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀தாயகம் திரும்பிய நார்வே அணியினர்: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
காலிறுதி போட்டியில் நார்வே அணி இங்கிலாந்திடம் 1-2 என தோல்வியடைந்தது.

🏀ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் வாங் லிங் சிங் உடன் மோதி இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார் ,

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay has instructed that milk procurement through the Aavin dairy cooperative should be increased rapidly.

🗒️ Vice President C. P. Radhakrishnan said that free legal aid should be provided to poor people through lawyers so that everyone can receive justice.

🗒️ CBSE has released a new update. It has issued a circular stating that students of Classes 9 and 10 must pass the internal assessment of the third language.

🏀 Sports News

🏀 Norway team returned home and received an enthusiastic welcome from fans after their campaign. Norway lost 1–2 to England in the quarter-final match.

🏀 At the Japan Open Badminton Tournament, India's P. V. Sindhu defeated Wong Ling Xing of Malaysia.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி