தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறியுள்ளார்.சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இதுவரை சுமார் 2 லட்சத்து 23 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டும், விண்ணப்பிக்கும் அனைவருக்குமே பொறியியல் படிப்பில் சேர இடம் கிடைக்கும்.ஜுலை மாதம் 9ம் தேதிதுவங்கி ஆகஸ்ட் மாதம் 12ம் தேதிவரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு ரூ. 32,500 கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படும். அதேப்போல, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் அனுமதி பெறுபவர்களுக்கு ரூ.62,500 கல்விக் கட்டணமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
May 30, 2012
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி