குரூப்-4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை துவங்கி, மார்ச், 4ம் தேதி வரை நடைபெறும்; இதில், 2,899 இடங்கள் நிரப்பப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக்கு, ஏற்கனவே, 3,485 பேர், பல்வேறு துறைகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டனர். மீதமுள்ள, 2,899 இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை துவங்கி, மார்ச் 1, 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில், தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும்.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் விவரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் இட்ட, இரண்டு செட் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். 10ம் வகுப்பை, தமிழ் வழியில் படித்ததாக உரிமை கோரும் தேர்வர்கள், சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம், சான்றிதழ் பெற்று வர வேண்டும். இவ்வாறு செயலர் தெரிவித்து உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி