அரசு வேலை மற்றும் ஆசிரியர் பணிக்கென வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2014

அரசு வேலை மற்றும் ஆசிரியர் பணிக்கென வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 90 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி உள்ள எண்ணிக்கையாகும் என்றுதமிழக அரசின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் 90 லட்சத்து 13 ஆயிரத்து 163 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 45 லட்சத்து 12 ஆயிரத்து 169 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகுப்புவாரியாக பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலப்புத் திருமணம் செய்தோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் சிறப்புப் பிரிவினராகக் கருதப்படுகின்றனர். அதன்படி, கலப்புத் திருமணம் செய்த 27 ஆயிரத்து 640 பேரும், மாற்றுத் திறனாளிகள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 543 பேரும் பதிவு செய்துள்ளனர். கல்வித் தகுதிகள்: இதில் 31 லட்சத்து 25 ஆயிரத்து 930 பேர் பத்தாம் வகுப்பு படித்தவர்களாகவும், பிளஸ் 2 முடித்தவர்கள் 22 லட்சத்து 66 ஆயிரத்து 195 பேரும் அடங்குவர். மேலும், இளநிலை பட்டங்களில் கலைப் படிப்புகள் படித்தோரில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 17 பேரும், அறிவியல் பிரிவில் படித்தவர்களில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 261 பேரும், வணிகப் பிரிவில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 153 பேரும், பட்டதாரி ஆசிரியர்களில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 14 பேரும், பொறியியல் பட்டதாரிகளில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 725 பேரும், மருத்துவம் படித்தோரில் 6 ஆயிரத்து 922 பேரும் தங்களது பெயர்களைப்பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி