தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2014

தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்


மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் புதன்கிழமை (பிப்.26) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஆறாவது ஊதியக் குழுவில் மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியத்தை தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு, இப்போது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தக் கட்டப் போராட்டம் தொடர்பாக எங்களது செயற்குழுவில் கூடி முடிவு செய்வோம் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி