அரசுத்துறையில் பணியாற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகளுக்கு தனி ஊதியம் 5 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
உயர் நீதி மன்றம் வழங்கிய பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில் தமிழக அரசு மற்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகள் கிரேடு- 3 ( 1.8.92 முதல் 1.9.98 வரை பணியில் சேர்ந்தவர்கள்) தனி ஊதியத்தில்5 சதவீதம் உயர்த்தப்படுகிறது.இதையடுத்து அனைத்து துறைத் தலைவர்களும் மேற்கண்ட டைப்பிஸ்டுகளுக்கு 5 சதவீத அடிப்படை சம்பளத்தை தனி ஊதியமாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த 5 சதவீத உயர்வு என்பது மேற்கண்ட டைப்பிஸ்டுகள் அதே பணியில் நீடிக்கும் வரையில் தொடரும்.
டைப்பிஸ்ட் பணியில் இருந்து மேற்கண்ட நபர்கள் பதவி உயர்வு பெற்று உயர் பதவிக்கு செல்லும் போது இந்த தனி ஊதியம் கிடைக்காது. இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி