தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இணையதளத்தில் கொண்டு வரும் பணிக்கான சிறப்புப் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியுள்ளது.
www.tnschools.gov.in என்ற இணையதளத்தில் சுமார் 57 ஆயிரம் பள்ளிகள், ஐந்தரை லட்சம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த தகவல்கள் இடம் பெற உள்ளன. இந்த இணையதளத்தை பராமரிப்பதற்காக, கல்வித்துறை அதிகாரிகளைக் கொண்ட 45 பேர் அடங்கிய குழுவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பயிற்சி அளிக்க உள்ளது.எழும்பூரில் உள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்ககத்தில் பயிற்சி முகாமை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். ஆசிரியர்களின் வருகை, மாணவர்களின் பாடக் குறிப்புகள், அரசு வழங்கும் உதவித் திட்டங்கள் குறித்த தகவல்கள் என பள்ளிக் கல்வித்துறை சார்பான அனைத்து தகவல்களும் இதில் தொகுக்கப்பட உள்ளன. இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி