'பிரித்வி - 2' ஏவுகணை சோதனை வெற்றி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2015

'பிரித்வி - 2' ஏவுகணை சோதனை வெற்றி

பாலாசூர் (ஒடிசா):அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன் உடைய, பிரித்வி - 2 ஏவுகணைச் சோதனை, ஒடிசா மாநிலத்தில் நேற்று வெற்றிகரமாக நடந்தது.

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பிரித்வி - 2 ஏவுகணைச் சோதனை, ஒடிசா மாநிலம் சாந்திபூரில் நேற்று நடத்தப்பட்டது. நடமாடும் ஏவுதளத்தில் இருந்து, ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணை, குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாகவும், ஏவுகணைச் சோதனை வெற்றியடைந்ததாகவும், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையான, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏவுகணை, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரானது. 500 முதல், 1,000 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று, துல்லியமாக தாக்கும் திறன் உடையது. சோதனையின் போது, ஏவுகணையின் செயல்பாடு, போக்கு ஆகியவை, ரேடார் மூலம் கண்காணிக்கப்பட்டதாக, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி