மாற்று திறனாளிகளுக்கு சலுகை : பள்ளிகளுக்கு அரசு உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2018

மாற்று திறனாளிகளுக்கு சலுகை : பள்ளிகளுக்கு அரசு உத்தரவு!


மாற்று திறனாளி குழந்தைகள், பள்ளி புத்தகங்கள், சீருடைகள் வாங்கும் செலவு, போக்குவரத்து கட்டணம், ஆகியவற்றை திருப்பி அளிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் நேற்று, தேசிய மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய மனிதவள மேம்பாட்டு தறை இணை அமைச்சர் சத்யபால் சிங் பங்கேற்று பேசியதாவது:மாற்று திறனாளி குழந்தைகளிடம் பரிவு காட்டுவது மட்டும் போதாது; அவர்களை கல்வி மூலம் உயர்த்துவதே, உண்மையான முன்னேற்றமாக இருக்கும்.மாற்று திறனாளி குழந்தைகள், பள்ளி புத்தகங்கள், சீருடைகள் வாங்கும் செலவு, போக்கு வரத்து கட்டணம், ஆகியவற்றை திருப்பி அளிக்கும்படி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த செலவை, மத்திய அரசு ஏற்கும். தவிர, மாற்று திறனாளி பெண் குழந்தைகளுக்கு, மாதம், 200 ரூபாய் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி