ஊதிய குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்ப வேண்டிய மாதிரி படிவம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2012

ஊதிய குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்ப வேண்டிய மாதிரி படிவம்.

ஊதிய குறை தீர்க்கும் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உரிய மனுக்களை பெற்று பரிசீலித்து ஊதிய முரண்பாடுகள் களைவது குறித்து அரசுக்கு உரிய பரிந்துரை அறிக்கையை அளிக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஊதிய குறை தீர்க்கும் குழுவிடம் 04.05.2012-க்குள் கோரிக்கைகளை நேரடியாகவோ அல்லது dspgrc@tn.gov.in எனறமின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் ஊதிய முரண்பாடுகளை குறித்து கோரிக்கை மனு ஒன்று PDF FORMAT-ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்து E-MAIL முகவிரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அப்படிவத்தில் தங்கள் கருத்துகளை சேர்க்க விரும்பினால் சேர்த்து 04.05.2012-க்குள் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பு : கோரிக்கைகளை நேரடியாகவோ அல்லது  E-MAIL முகவிரி மூலமோ அனுப்பவும். அப்படிவத்தில் தங்கள் பெயர் முகவரி,தொடர்பு எண் மற்றும் E-MAIL ஆகியவை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

2 comments:

  1. இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ 750 ஐ 01.01.2006 முதலே கருத்தியலாக வழங்கினால்தான் சனவரி 2011 க்குப் பின்பு பதவி உயர்வு பெற்றவர்களுக்கும்,01.01.2006 முதல் 31.12.2010 முடிய பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் இடையிலான ஊதிய உயர்வு முற்றிலும் நீங்கும் என்பது என்னுடைய பணிவான கருத்தாகும்

    ReplyDelete
  2. இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ 750 ஐ 01.01.2006 முதலே கருத்தியலாக வழங்கினால்தான் சனவரி 2011 க்குப் பின்பு பதவி உயர்வு பெற்றவர்களுக்கும்,01.01.2006 முதல் 31.12.2010 முடிய பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் இடையிலான ஊதிய முரண்பாடு முற்றிலும் நீங்கும் என்பது என்னுடைய பணிவான கருத்தாகும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி