கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதை தவிர்க்க கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2012

கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதை தவிர்க்க கோரிக்கை.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குனர் மதிப்புமிகு தேவராஜன் அவர்களை சந்தித்து 2012-2013ம் கல்வியாண்டு முப்பருவமுறைக்கான பயிற்சிகளை கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கு வழங்குவதை தவிர்க்கும் படி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முப்பருவக் கல்விமுறை அடுத்த கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுவதால், ஆசிரியர்களை தயார்படுத்தி பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மே மாதத்தில் பயிற்சிகள் அளிக்கப்படவிருககிறது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளளது. பெரும்பான்மையான ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்பவர்களாக இருக்கின்றனர். தொலைநிலைக் கல்வி மூலம் B.A., B.Sc., M.A., M.Sc., B.Ed., M.Ed. போன்ற கல்வி பயில்வோருக்கு தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் பணியாற்றுவோர் விடுமுறைக்கு தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்க பயிற்சிகளை ஜூன் 2012 தொடக்கத்தில் நடத்திடவும் பயிற்சிகள் முழுவதும் நடத்தும் பொறுப்பு SCERT-யிடம் உள்ளதால் அனைத்து பயிற்சிகளையும் திட்டமிட்டு திறமை வாய்ந்த மாநில கருத்தாளர்களை கொண்டு முறையான அறிவிப்பு செய்து பயிற்சிகளை நடத்திடவும் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களையும் ஒரே நேரத்தில் அழைத்திடாமல் கற்றல் பணியில் பாதிப்பு ஏற்படாமல் நடத்திடவும் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பயிற்சிகளையும் முடிக்கவும் கேட்டு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இது குறித்து இயக்குனர் திரு. தேவராஜன் அவர்கள் நமது நிர்வாகிகளிடம் கூறியதாவது: கடந்த வாரம்தான் பயிற்சி தொடர்பான ஆணை வெளியாகியுள்ளது.  அதை தொடர்ந்து மாநில கருத்தாளர் தேர்வில் தாமதம் ஏற்படுகின்றது.  முடிந்த வரை ஏப்ரல் 28க்குள் பயிற்சி அளிக்கப்படும்.  தொடக்கக்கல்வி துறையில் 1-5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாளும் 6,7மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு (பள்ளிக்கல்வித்துறை உட்பட) 2 நாள் மட்டுமே பயிற்சி நடத்தப்பட உள்ளது.  வேறு மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் மே விடுமுறையில் இருந்தால் அங்கு நடக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம்  பி.எட். பயிற்சி பட்டறை, பல்கலை கழக தேர்வு எழுதுபவர்கள், தவிர்க்க முடியாத குடும்ப விழாவில் இருப்பவர்கள் ஆகியோர் ஏதாவது ஒரு Batch-ல் கலந்து கொண்டால் போதும்  அடுத்த பயிற்சிகள் நன்கு திட்டமிடப்பட்டு நல்ல தகுதி வாய்ந்த கருத்தாளர்களை கொண்டு முறையாக அறிவிக்கப்பட்டு நடத்தப்படும்  அனைத்து பயிற்சிகளும் டிசம்பருக்குள் நடத்திட திட்டமிடப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி