01.01.2012 முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்சரிப்பார்த்து ஒப்புதல் வழங்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2012

01.01.2012 முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்சரிப்பார்த்து ஒப்புதல் வழங்க உத்தரவு.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 04404 / இ1 / 2012, நாள். 12.05.2012.தொடக்கக்கல்வித் துறை சார்ந்த அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான2012 - 2013 ஆம் ஆண்டு 01.06.2012 அன்று ஏற்படும் உத்தேச காலிப்பணியிடங்களுக்கு 01.01.2012 தேதியின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் சரிப்பார்த்து ஒப்புதல் வழங்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.இக்கூட்டத்திற்கு வரும் போது கடந்த ஆண்டுமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் ஒப்புதல் அளித்த (01.01.2011)முன்னுரிமை / பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் தவறாது கொண்டு வரவும்.மேற்கூறிய ஆய்வு கூட்டம் கீழ்காணும் பட்டியலின்படி நடைபெறவுள்ளது.இடம்நாள்மாவட்டங்கள்காஞ்சிபுரம் - 17.05.2012 ( காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் )திருச்சி - 18.05.2012 ( திருச்சி, அரியலூர், கரூர், பெரம்பலூர் )தஞ்சாவூர் - 18.05.2012 ( தஞ்சாவூர், நாகை, புதுகோட்டை, திருவாரூர் )ஈரோடு - 19.05.2012 ( ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி )சேலம் - 21.05.2012 ( கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல் )மதுரை - 23.05.2012 ( சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் )திருநெல்வேலி-23.05.2012 (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்தக்குடி, விருதுநகர் )திருவண்ணாமலை-25.05.2012 (திருவண்ணாமலை, வேலூர், கடலூர் )மேலே குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் காலை 10.00 மணிக்குகூட்டம் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி