செயல்திறன் குறைந்த குழந்தைகளையும் கட்டாய கல்வி சட்டத்தில் கொண்டு வரும் வகையிலான சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.குழந்தைகளுக்கு கட்டாய மற்றும் இலவச கல்வி கற்றுத்தரும் வகையில், கல்வி அடிப்படை உரிமை சட்ட மசோதா, ராஜ்யசபாவில் கடந்த ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியா சுலே, காங்கிரஸ் எம்.பி., பிரியா தத் போன்றோர், "குறிப்பிட்ட சிலநோய்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை,பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவது இல்லை. குறிப்பாக, செயல் திறன் குறைந்தகுழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயங்கி, வீடுகளிலேயே, கல்வி கற்றுத் தருகின்றனர்.இதனால், அந்த குழந்தைகள் தனிமை சூழலில் வசிக்கின்றனர். அவர்களையும் பள்ளிக்கு வரவழைக்கும் வகையில், கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டத்தில், செயல் திறன் குறைந்த குழந்தைகளையும் சேர்க்க வேண்டும்" என, வலியுறுத்தினர்.இதைத் தொடர்ந்து, செயல்திறன் குறைந்த குழந்தைகளையும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வகையிலான, கல்வி அடிப்படை உரிமைசட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
May 10, 2012
Home
kalviseithi
செயல்திறன் குறைந்த குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி!
செயல்திறன் குறைந்த குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி!
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி