பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2010-11
கல்வியாண்டு தரம் உயர்த்தப்பட்ட 284
நடுநிலைப்பள்ளிகளில் , தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.இதனால், பள்ளி நிர்வாக பணி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கல்வித்தரத்தை
மேம்படுத்துவதற்காக ஆரம்ப பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும்,நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும்,உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த 2010-11 கல்வியாண்டு,பள்ளிக்கல்வித்துறை
சார்பில், தமிழகம் முழுவதும் 284 பள்ளிகள்
ஆரம்பப்பள்ளியிலிருந்து நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டன.இப்பள்ளிகளில் தற்போது வரை தலைமை ஆசியர்கள் நியமிக்கப்படவில்லை .பள்ளி ஆசிரியர்களே (பொறுப்பு) தலைமை ஆசிரியராக
கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் 18 ஆயிரம் இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் மிகவும் குறுகிய காலத்தில,
தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை
வழங்கப்பட்டுள்ளது.பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், காலியாக
உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப
இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இது குறித்து,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் மாநில பொது செயலாளர் முருக செல்வராஜ் கூறியதாவது:தலைமை ஆசிரியர்கள்
பதவி, பள்ளிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பள்ளிகல்வித்துறை சார்பில்,நடைமுறைப்படுத்த
வேண்டிய அனைத்து செயல்பாடுகளும்,
நலத்திட்டங்களுக்கும் தலைமை ஆசிரியர்களே
பொறுப்பானவர்கள்.இதுபோன்ற சூழலில் தலைமை ஆசிரியர் பதவிகள் காலியாக இருப்பது
ஏற்புடையதல்ல. மேலும் இப்பொறுப்பிற்கு
ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்
கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படவேண்டும்.
அவ்வாறு நிரப்பப்படும் போது ஆரம்பப்பள்ளி
தலைமை ஆசிரியர்கள் இடம் காலியாக
அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு பட்டதாரி
ஆசியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் தேர்வு
செய்யப்படுவார்கள்.இவ்வாறு பதவி உயர்வு பெறும்
ஆசிரியர்களின் பணி இடங்கள் காலியாக
அறிவிக்கப்பட்டு புதிய பணிநியமனத்திற்கு
எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்
இடம் நிரப்பப்படாமல் இருப்பதால் இதுபோன்ற
நிர்வாக ரீதியாக பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Dec 16, 2012
Home
SCHOOL
2010 - 11ஆம்
கல்வியாண்டில் தரம்
உயர்த்தப்பட்ட 284
பள்ளிகளில்
தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் காலி.
2010 - 11ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 284 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி