:தமிழகத்தில் 29 ஆயிரம் பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இன்று (1ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகிறது.தமிழகத்தில் 29 ஆயிரத்து 176 பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு அனைத்து மாவட்டங்களிலும் இன்று (1ம் தேதி) பயிற்சி ஆரம்பமாகிறது. இதற்காக அரசு 2 கோடியே 39 லட்சத்து 10 ஆயிரத்து 880 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நான்கு நாட்கள் பயிற்சி முகாம் இன்று (1ம் தேதி) ஆரம்பமாகிறது.இதில் நெல்லை கல்வி மாவட்டத்தில் நெல்லை டவுன் அரசு மேல்நிலைப்பள்ளி, சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளோதோர் மேல்நிலைப் பள்ளி, தென்காசி கல்வி மாவட்டத்தில் ஐ.சி.இ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்றுமையங்களில் இப்பயிற்சி நடக்கிறது.இதில் நெல்லை கல்வி மாவட்டத்தில் தமிழ் 285, ஆங்கிலம் 50ஆசிரியர்கள், கணிதம் 287, அறிவியல் 295, சமூக அறிவியல் 171 உட்பட மொத்தம் ஆயிரத்து 88 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் அறிவியல் பாடத்திற்கு இன்று (1ம் தேதி) முதல் நாளை, வரும் 13, 14ம் தேதிகளிலும், ஆங்கில பாடம் வரும் 8,9,20,21ம் தேதிகளிலும், தமிழ் பாடம் வரும் 6,7,18மற்றும் 19ம் தேதிகளிலும், கணித பாடம் வரும் 4,5,15 மற்றும் 16ம் தேதிகளிலும், சமூக அறிவியல் பாடம் வரும் 11,12, 22 மற்றும் 23ம் தேதிகளிலும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் காதர் சுல்தான் ஆலோசனையின் பேரில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நடந்தகுமார், பயிற்சி ஒருங்கிணைப்பாளர்ஆவுடையப்பன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வநாயகம், ஆறுமுகராஜன், திட்ட பணியாளர்கள் சாந்தி, சங்கர் பாலாஜி, மாரி சங்கர், பாப்பு, கண்ணன், அருள்ஜோதி, சிவலிங்கம் செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி