தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும், 22ம் தேதி துவங்குகிறது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த, 21ம் தேதி துவங்கியது. வரும், 27ம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவடைகிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.தேர்வுகள் அனைத்தும், 27ம் தேதி முடிவடையும் நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி வரும், 22ம் தேதி முதல் துவங்க இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முதற்கட்டமாக, 15 மையங்களில், விடைத்தாள்களுக்கு மாற்று எண் (டம்மி) வழங்கும் பணி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 20 மையங்களில், 28ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி