தமிழக அரசின் ஆணைப் படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் கணினியை கட்டாயப் பாடமாக்கியுள்ளது. இது போன்ற பணியிடங்களுக்கு பதிவு மூப்பு மற்றும் போட்டித் தேர்வின் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்வது வழக்கம். இதில் கணினி ஆசிரியர்களாக பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதில் கூறியிருப்பதாவது: உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி, வாழ்க்கைக் கல்வி, தோட்டக்கலை ஆகிய பல துறைகளில் படித்து வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு கடந்த 5.3.2012 அன்று 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களாக நியமித்து தமிழக அரசு பணி ஆணை வழங்கியது. இதில் கடந்த ஒரு ஆண்டாக கணினித்துறையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது அரசு 6ம்வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினியை கட்டாயப் பாடமாக்கியுள்ளது. இப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது ஏற்கனவே ஒரு ஆண்டாக பள்ளிகளில் கணினி பாடம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இப்பணியிடங்கள் நிரப்புவதில் தேர்வு மற்றும் பதிவு மூப்பைக் கடைபிடிக்காமல் எங்களுக்கு முன்னுரிமை வழங்கும்படி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Mar 19, 2013
Home
BT
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை.
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி