புதிய வரிகள் ஏதும் இல்லை, அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி, 6 லட்சம் லேப்டாப் வழங்க நடவடிக்கை , 8 கலை அறிவியல் கல்லூரிகள், பழங்குடியினருக்கு சைக்கிள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2013

புதிய வரிகள் ஏதும் இல்லை, அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி, 6 லட்சம் லேப்டாப் வழங்க நடவடிக்கை , 8 கலை அறிவியல் கல்லூரிகள், பழங்குடியினருக்கு சைக்கிள்.

புதிய வரிகள் ஏதும் இல்லை:
இந்த பட்ஜெட்டில் வரி உயர்வோ, புதிய வரிகள் ஏதும் தேவையில்லைஎன முதல்வர் முடிவு செய்துள்ளதாக பன்னீர்செல்வம் தனது பட்ஜெட்டில் அறிவித்தார். அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி:அரசு அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சக்தி அமைக்கப்படும். இதற்காக ஒவ்வொரு எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் ஒதுக்கப்படும் என பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.  6 லட்சம் லேப்டாப் வழங்க நடவடிக்கை:மாணவர்களுக்கு 6 லட்சம் லேப்டாப் வழங்கப்படும் என்றும், இதற்காக 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும். 2013-14ம் ஆண்டில் முதல்தலை முறை பட்டதாரிகளுக்காக 673 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.பழங்குடியினருக்கு சைக்கிள்:ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்க இலவச சைக்கிள் வழங்கப்படும் எனவும், இதற்காக ரூ.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி