மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ள சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த நடைமுறைக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மத்திய அரசு இதனை நிறுத்தி வைப்பதாக அமைச்சர் நாராயணசாமி மக்களவையில் இன்று அறிவித்தார்.இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது-"சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகள் குறித்து உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகளை அரசு கவனத்தில் எடுத்து கொள்கிறது. மத்தியஅரசு பணியளர் தேர்வாணய உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். அது வரை புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்படும்” என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி