பள்ளி, கல்லூரி வளாகங்களில் 100 ஆவின் பாலகங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2013

பள்ளி, கல்லூரி வளாகங்களில் 100 ஆவின் பாலகங்கள்.

ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, கணினிமயமாக்கும் திட்டம், 10 கோடி ரூபாய் செலவில், செயல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக சட்டசபையில், பால்வளத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு:
* பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலக கட்டடங்கள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில், பால் மற்றும் பால் உபபொருட்கள் கிடைக்க ஏதுவாக, நடப்பாண்டில், 100 ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்.
* தரமான பாலை, உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய,துணைநிற்கும் தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு, சங்கத்தின் பால் உற்பத்தி, விற்பனை மற்றும் சங்கங்கள் ஈட்டுகின்ற லாபத்திற்கு உட்பட்டு, கூடுதல் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
* தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ், ஆவின் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, கணினிமயமாக்கும் திட்டம், 10 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி