அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி மையம் தேர்வு முடிவுகள் இன்டர்நெட், வாய்ஸ் நெட் தொலைபேசி மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் நேற்று (10ம் தேதி) முதல் வெளியிடப்பட்டுள்ளது.தொலைத்தூர கல்வி தேர்வு கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் ரகுபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக தொலை தூர கல்வி மையம் மூலம் டிசம்பர் 2012ல் கலை மற்றும்
அறிவியல் பாடப்பிரிவில் இளம் கலை, முதுகலை வகுப்புகள் மற்றும் டிப்ளமோ வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடப்பிரிவுகளின் தேர்வு முடிவுகள் நேற்று (10ம் தேதி) முதல்வெளியிடப்பட்டுள்ளது.இந்தத் தேர்வு முடிவுகள் அனைத்தும் இன்டர்நெட், வாய்ஸ் நெட் தொலைபேசி மற்றும் எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட உள்ளது. இதில்www.annamalaiuniversity.ac.in,www.kalvimalar.com ஆகிய இணையதளத்தில் காணலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டு மதிப்பெண்ணை வெளியிடவும்,இல்லை என்றால் தேர்வு வைக்கவும்.நான் PLIS படிக்க இரண்டாம் ஆண்டு மதிப்பீடு தேவை அதனால் இந்த ஆண்டு படிப்பை தொடரமுடியவில்லை.தயவு செய்து பதில் தரவும் ஐயா.நன்றி
ReplyDelete