அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் ஊதியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2013

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் ஊதியம்.

சிதம்பரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காசோலை மூலம் வங்கியில் பணம் எடுத்து ரொக்கமாக ஊதியம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் மின்னணு பணப் பரிமாற்றம் மூலம் அரசு கருவூலத்திலிருந்து வங்கிகள் மூலம் அந்தந்த ஊழியரின் வங்கிக் கணக்குக்கு மாத ஊதியம் மாற்றப்பட்டு வந்தது.இந்நிலையில் சிதம்பரம் துணைக் கருவூலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சாஃப்ட்வேர் கோளாறினால் மின்னணு பணப் பரிமாற்றம்மூலம் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்ய முடியாமல் போனது.இதனால் அந்தந்த அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத் தொகையை மொத்தமாக காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த அலுவலக நிர்வாக மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காசோலையை வங்கிக்குக் கொண்டு சென்று பணமாக மாற்றி அனைவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டதால் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இந்த மாதம் கூடுதல் சுமை ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.இனி வரும் காலங்களில் ஊதியம் வழங்கும் மாத இறுதிநாளில் சாஃப்ட்வேர் நல்லமுறையில் செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொண்டுஇதுபோன்ற கோளாறுகள் ஏற்படாமல் இருக்க கருவூல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி