சி.பி.எஸ்.சி எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்ற அறிவிப்பால் அதிக சி.பி.எஸ்.இ பள்ளிகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழைப் பெற தேவையில்லை என்ற சுற்றறிக்கை கடந்த ஜூலை 8-ஆம் தேதி சி.பி.எஸ்.இ மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பள்ளி சி.பி.எஸ்.சி பள்ளியாக மாறுவதற்கு சம்பந்தப்பட்ட மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.சி பள்ளியாக மாற்றப்படுவதற்கு ஆட்சேபனை எழும் பட்சத்தில் மட்டும், மாநில அரசின் தடையில்லாச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் கொண்ட தனியார் பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை பெற வேண்டியது கட்டாயம் என்ற நிலை இந்த புதிய அறிவிப்பால் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி