போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த மாநகராட்சி இடைநிலை ஆசிரியர்கள் விரைவில் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரமாக களம் இறங்கியுள்ளது.சென்னை மாநகராட்சி இடைநிலை ஆசிரியர்கள் பலர், போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த தகவல் வெளியானது. இதுகுறித்து, மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் குறித்து, ‘தினமலர்' நாளிதழ் விரிவான செய்தி வெளியானது.இதையடுத்து, சர்ச்சையில் சிக்கிய போலி சான்றிதழ் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சான்றிதழ் போலி என உறுதி செய்யப்பட்டுள்ள, 10 பேரை விரைவில் பணி நீக்கம் செய்யவும், இந்த சர்ச்சை பட்டியலில் உள்ள, 126 பேர் மீதான விசாரணையை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில், பல ஆசிரியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்துள்ளது. விசாரணைக்கு வர மறுக்கும் ஆசிரியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி