முதுகலை ஆசிரியர்களுக்கு "திறன் வளர் பயிற்சி" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2013

முதுகலை ஆசிரியர்களுக்கு "திறன் வளர் பயிற்சி"

தமிழகத்தில், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நாளை முதல், செப்., 11ம் தேதி வரை, "திறன் வளர் பயிற்சி" வழங்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மாணவர்களுக்கு, பாடங்களை எளிமையாக கற்பிக்க, முதுகலை ஆசிரியர்களுக்கு, திறன் வளர் பயிற்சி வழங்கப்படுகிறது. ஏற்கனவே, சென்னையில் பாட வாரியாக பயிற்சி பெற்ற, முதன்மை கருத்தாளர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பேராசிரியர்களை கொண்டு, இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.வரும், 26, 27ல், ஆங்கிலம் மற்றும் வணிகவியல், கணக்கு பதிவியல்; ஆக., 29, 30ல், கணிதம்; செப்., 2, 3ல், இயற்பியல்; செப்., 6, 7ல், வேதியியல்; செப்., 10, 11ல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்களுக்கு, பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி