கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்(GATE) எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு 2014 பிப்ரவரியில்துவங்கி மார்ச் வரை நடைபெறுகிறது.இந்தியன் இன்ஸ்ட்டிடியட் ஆப் சயின்ஸ் மற்றும் எழு தொழில் நுட்ப மையங்களிலும் பொறியியல் படிப்புகளில் சேர கேட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
கல்வித்தகுதி:
இளநிலையில் இன்ஜினியரிங், டெக்னாலஜி, ஆர்க்கிடெக்நர், பார்மசி படிப்பு அல்லது முதுகலை பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.பி.எஸ்., முதுகலை பட்டயப் படிப்பு இறுதியாண்டு தேர்வெழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.முதுகலையில் (அறிவியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல்) தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு தேர்வெழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.இன்ஜினியரிங், டெக்னாலஜி பிரிவில் 4 வருட ஒருங்கிணைந்த முதுகலைபட்டப் படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.5 வருட ஒருங்கிணைந்த முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1500ம், மாணவிகளுக்கு ரூ,750ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்:
செப்டம்பர் 2ம் தேதி முதல் விண்ணப்ப படிவங்கனை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அக்டோபர் 3 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள். கேட் தேர்வு பிப்ரவரி 1, 2014 முதல் மார்ச் 2 வரை நடைபெறுகிறது.கூடுதல் தகவல்களுக்கு gate.iitkgp.ac.in/gate2014 என்ற வலைதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி