முதுநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2013

முதுநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.

மதுரையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுக் கூட்டம், மாநில தலைவர் சுப்பையா தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரன் வரவேற்றார். நிர்வாகிகள் ஜம்பு, தமிழ்ச்செல்வம், சுரேஷ், நீலாவதி, வள்ளிவேலு உட்பட பலர் பங்கேற்றனர். பொதுச் செயலாளர் விஜயகுமார்
தீர்மானங்களை விளக்கினார்.முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசுக்கு இணையாக வழங்க வேண்டும். அரசாணை 720ல் திருத்தம் செய்து, பதவி உயர்வு வாய்ப்பு வழங்க வேண்டும். 2003-04க்கு பின் நியமனம் பெற்று 1.6.2006க்குப்பின் பணிவரன்முறை பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு, நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்யப்பட வேண்டும். உதவிபெறும் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவியை, பணிமூப்பு அடிப்படையில் வழங்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி,அக்.,4 முதல் 9 வரை பிரசார பயணம், அக்., 10ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி