ஓய்வூதிய திருத்த மசோதவை (CPS BILL) நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2013

ஓய்வூதிய திருத்த மசோதவை (CPS BILL) நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நாளை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் அட்டவணையில் 4வது பணியாக PFRDA மசோதாவை திரு.பா.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமது NPSERA வின் தொடர் நிர்பந்தம் காரணமாக அனைத்து தொழிற்சங்கம்களும் பல்வேறுவிதமான போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டிருக்கின்றன.CITU வின் சார்பாக திங்கள் அன்று சென்ட்ரலில் நடைபெறும் போராட்டத்திற்கு நமது
சார்பாக NPSERA வின் செயலாளர் திரு.பென்ஜமின் ராபர்ட் தலைமயில் நமது உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும் PFRDA மசோதவை எதிர்த்து நமது பகுதியில் நடைபெறும் பல்வேறு விதமான போராட்டங்களிர்க்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி நமது NPSERA நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றது. மேலும் நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் PFRDA மசோதா வின் மீது இறுதியான நிலை பற்றி தெரிந்தவுடன் நமது நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிக்கின்றோம். நமது நியாயமான கோரிக்கைகள் மத்திய அரசால் ஏர்கப்படும்வரை நமது போராட்டம் தொடரும் என்பதைஇதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்துகொள்கின்றோம். நமது NPSERA விற்கு தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.ஒன்றுப்படுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!
தோழமையுடன்
நா. வடிவாம்பாள்
NPSERA.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி