மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி வரும் 30ல் மறியல் ஆசிரியர் கூட்டணி தீர்மானம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி வரும் 30ல் மறியல் ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.

மத்திய அரசு ஊழியர் களுக்கு இணையான சம்பளம் வழங்கக்கோரி,ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில், 30ம் தேதிமறியல் போராட்டம் நடத்தப்படும்' என, தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூரில் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் ஜெகதீஸ் தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி, பொருளாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும், 19ம் தேதி முதல், 24ம் தேதி வரை,தமிழகம் முழுவதும் ஆசிரியர் சந்திப்பு பிரசாரம் நடத்துவது,தொடர்ந்து வரும், 30ம் தேதி கரூரில் மறியல் போராட்டம் என, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி