750 தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2013

750 தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி.

தமிழகம் முழுவதும் 750 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், ஆசிரியர்களின்
திறமையை வெளிக்கொண்டு வருதல், மாணவர்களின் பெற்றோர்களுடன் உறவை மேம்படுத்துதல், பள்ளிகளில் உள்ள நூலகங்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் போன்றவற்றை சிறப்பாகப் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.இங்கிலாந்து, இந்தியா கல்வி ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழகத்தில், முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையாசிரியர்கள், ஓய்வுபெற்றமாவட்ட கல்வி அதிகாரிகள் என 64 பேருக்கு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் 5 நாள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 750 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் தொடக்கத்திலேயோ தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி