கடலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கல்வித் துறை அலுவலக ஊழியர்களுக்கு சி.யூ.ஜி., மொபைல் இணைப்பு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் 1,728
பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 29 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வி குறித்த தகவல்கள், தேர்வு நேரங்களில் தபால் மூலம் சுற்றறிக்கை அனுப்புவது, இணையதள வசதி இல்லாதது, மொபைலில் சிக்னல் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக தகவல் பரிமாற்றம்செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.இப்பிரச்னையைத் தவிர்க்கும் வகையில் 2007ம் ஆண்டு அப்போதையை முதன்மைக் கல்வித் துறை அதிகாரியாக இருந்த குப்புசாமி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சி.யூ.ஜி., மொபைல் இணைப்பை வழங்கினார்.இதன் மூலம் உடனடியாக இலவசமாக தகவல் பெறப்பட்டது. இந்த நடைமுறை சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. நாளடைவில் இதனைப் பயன்படுத்துவதில் ஆர்வம் குறைந்தது.தமிழக அரசு, கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில், இலவச சைக்கிள், கல்வி உதவித் தொகை, விலையில்லா மடிக்கணினி, பாடபுத்தகங்கள், நோட்டுகள் என 14 நலத் திட்டங்களை வழங்குகிறது. இதுபோன்ற நிலையில், கல்வித்துறையில் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்தும், கல்வி குறித்த தகவல்உடனுக்குடன் தெரிவிக்கும் விதமாக சி.யூ.ஜி., இணைப்பு நடைமுறையை மீண்டும் அமல்படுத்த முதன்மைக் கல்வித் துறை அலுவலகம் முடிவு செய்தது.அதன்படி, முதன்மைக் கல்வித் துறை அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் என மொத்தம் 385 பேருக்கு மொபைலில் சி.யூ.ஜி., இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.இந்த இணைப்பைக் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 29 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்வி குறித்த தகவல்கள், தேர்வு நேரங்களில் தபால் மூலம் சுற்றறிக்கை அனுப்புவது, இணையதள வசதி இல்லாதது, மொபைலில் சிக்னல் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக தகவல் பரிமாற்றம்செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.இப்பிரச்னையைத் தவிர்க்கும் வகையில் 2007ம் ஆண்டு அப்போதையை முதன்மைக் கல்வித் துறை அதிகாரியாக இருந்த குப்புசாமி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சி.யூ.ஜி., மொபைல் இணைப்பை வழங்கினார்.இதன் மூலம் உடனடியாக இலவசமாக தகவல் பெறப்பட்டது. இந்த நடைமுறை சில மாதங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. நாளடைவில் இதனைப் பயன்படுத்துவதில் ஆர்வம் குறைந்தது.தமிழக அரசு, கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில், இலவச சைக்கிள், கல்வி உதவித் தொகை, விலையில்லா மடிக்கணினி, பாடபுத்தகங்கள், நோட்டுகள் என 14 நலத் திட்டங்களை வழங்குகிறது. இதுபோன்ற நிலையில், கல்வித்துறையில் அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்தும், கல்வி குறித்த தகவல்உடனுக்குடன் தெரிவிக்கும் விதமாக சி.யூ.ஜி., இணைப்பு நடைமுறையை மீண்டும் அமல்படுத்த முதன்மைக் கல்வித் துறை அலுவலகம் முடிவு செய்தது.அதன்படி, முதன்மைக் கல்வித் துறை அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் கடலூர் மற்றும் விருத்தாசலத்தில் பணிபுரியும் ஊழியர்கள், மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் என மொத்தம் 385 பேருக்கு மொபைலில் சி.யூ.ஜி., இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.இந்த இணைப்பைக் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி