கல்வித்தரம் மேம்படுத்த ஆராய்ச்சி: நிபுணர் குழுவை நியமித்தது அரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2013

கல்வித்தரம் மேம்படுத்த ஆராய்ச்சி: நிபுணர் குழுவை நியமித்தது அரசு.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 60 வகையான ஆராய்ச்சி திட்டங் களை, அடுத்த இரு ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளது. இதற்காக, துறை இயக்குனர் தலைமையில், 13 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின், பிரதான வேலையே, கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி பணிகளைமேற்கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால், பல ஆண்டுகளாக, இந்தப் பணி நடைபெறவில்லை. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை நடத்துவது மட்டுமே, இந்த துறையின் முக்கிய பணியாக இருந்து வந்தது.கடந்த இரு ஆண்டு களாக, துறையின் முக்கிய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாடப் புத்தகங்களை தயாரிக்கும் பணியை, இந்த துறை செய்தது. தற்போது, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்களை உருவாக்கும் பணியையும், இந்த துறை செய்து முடித்துள்ளது. இந்நிலையில், கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், 60 வகையிலான ஆராய்ச்சி திட்டங்களை, நடப்பு ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் மேற்கொள்வதற்கு, துறை இயக்குனர், கண்ணப்பன், நடவடிக்கை எடுத்துள்ளார்.ஆசிரியரின் கற்பித்தல் பணியை மேம்படுத்துவது, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, செய்யுளை, பாடி கற்பிப்பதன் வழியாக, கற்கும் திறனை மேம்படுத்துவது, குழந்தைகள் கற்றல் திட்டத்தில், கிராமப்புற பெற்றோரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், ஆராய்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படஉள்ளன. இதற்காக, இயக்குனர், கண்ணப்பன் தலைமை யில், 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பேராசிரியர்கள் உட்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.இதுகுறித்து, இயக்குனர், கண்ணப்பன் கூறுகையில்,&'&'ஆசிரியர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபடுகின்றனர். கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், ஒரு தலைப்பை தேர்வு செய்து, அது தொடர்பாக, முழுமையாக ஆய்வு செய்து, ஆராய்ச்சி அறிக்கையை தயார் செய்வர்,&'&' என்றார்.இந்த ஆராய்ச்சி திட்டங்கள் முழுமை அடைந்து, அவைகளை, பள்ளிகளில் அமல்படுத்தும் போது, கல்வித்தரம், படிப்படியாக உயரும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி