மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2013

மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை.

சிவகங்கை: மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை,நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி,வினியோகிக்க அரசு நடவடிக்கைஎடுத்து வருகிறது.அரசு,உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு,நோட்டு
புத்தகம்,சைக்கிள்,பை,காலணி,அறிவியல் உபகரணம்,லேப்-டாப் உட்பட 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. தற்போது,இப்பொருட்கள் சி.இ.ஓ.,-டி.இ.ஓ.,க்களிடம் ஒப்படைக்கப்பட்டு,தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இதில்,பல்வேறு சிரமங்கள் உள்ளன.இலவச பொருட்களை பெற,ஒவ்வொரு முறையும் வாடகை வாகனங்களை எடுத்துக்கொண்டு,தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் ஆகியோர்,மாவட்ட தலைநகருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் பணி,மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.இதைக் கருத்தில் கொண்டு,தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில்,அந்தந்த கல்வியாண்டிற்கு தேவையான,இலவச பொருட்களை,பள்ளிகளிலேயே நேரடியாக இறக்கி,தாமதமின்றி வினியோக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது."இப்பணியில்,ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி