தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு5 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 10 ரூபாயுமாக உயர்த்தியும், சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பால் வழங்க முதல்வர் உத்தரவிடவேண்டும், என
பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.ஈரோட்டில், ஈரோடு - திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொருளாளர் ராமசாமிதலைமையில் நடந்தது.தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக பால் உற்பத்தியை,ஒருகோடி லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என அறிவித்திருந்தார். தொடர்ந்து பால் கொள்முதல் 25 லட்சம்லிட்டராக உள்ளது.பால் நுகர்வோர் பாதிக்காத வகையில் கர்நாடகா அரசு வழங்கும்4 சதவீத ஊக்க விலையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். அதன்படி பசும்பால் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தி 25 ரூபாயாகவும், எருமை பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி 36 ரூபாயாக அறிவிக்க வேண்டும்.பள்ளியில் சத்துணவு திட்டத்தில் பால், பால் பவுடர் வழங்கிடஉத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு நடவடிக்கைஎடுக்காத பட்சத்தில், மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி, பால் உற்பத்தி நிறுத்தம், கறவை மாடுகளுடன் மாவட்டந்தோறும் மறியல் ஆகியவை நடத்தப்படும், என மாநில தலைவர் செங்கோட்டுவேல் தெரிவித்தார்.
பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.ஈரோட்டில், ஈரோடு - திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க பொருளாளர் ராமசாமிதலைமையில் நடந்தது.தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக பால் உற்பத்தியை,ஒருகோடி லிட்டராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், என அறிவித்திருந்தார். தொடர்ந்து பால் கொள்முதல் 25 லட்சம்லிட்டராக உள்ளது.பால் நுகர்வோர் பாதிக்காத வகையில் கர்நாடகா அரசு வழங்கும்4 சதவீத ஊக்க விலையை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். அதன்படி பசும்பால் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தி 25 ரூபாயாகவும், எருமை பால் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி 36 ரூபாயாக அறிவிக்க வேண்டும்.பள்ளியில் சத்துணவு திட்டத்தில் பால், பால் பவுடர் வழங்கிடஉத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு நடவடிக்கைஎடுக்காத பட்சத்தில், மாநில செயற்குழு கூட்டத்தை கூட்டி, பால் உற்பத்தி நிறுத்தம், கறவை மாடுகளுடன் மாவட்டந்தோறும் மறியல் ஆகியவை நடத்தப்படும், என மாநில தலைவர் செங்கோட்டுவேல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி